யுனிகோடு உமர் அவர்களின் மறைவு
தேனீ யுனிகோடு எழுத்துருவை தமிழ் உலகத்திற்கு தந்த உமர் அவர்கள் இன்று (12.07.2006) மாலை 5.30 -க்கு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார்.
யுனிகோடுவின் பல்வேறு வகை பயன்பாடுகள் மற்றும் RSS ஓடை பற்றிய கட்டுரைகளோடு இவரின் தமிழ் அகராதியும் பிரபலமானவை. யுனிகோடுவின் வளர்ச்சி பற்றி பேசப்படும் தளங்கள் மற்றும் மடலாற்குழுமங்களில் உமர் அவர்களின் கட்டுரைகளை காணலாம்.
அனைத்து தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் இயங்கு எழுத்துரு (THENEE.eot) தயாரித்து அனைவரின் நேரத்தையும், சிரமத்தையும் குறைத்தவர் உமர் அவர்கள்.
உமர் அவர்கள் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிகோடுவின் பல்வேறு வகை பயன்பாடுகள் மற்றும் RSS ஓடை பற்றிய கட்டுரைகளோடு இவரின் தமிழ் அகராதியும் பிரபலமானவை. யுனிகோடுவின் வளர்ச்சி பற்றி பேசப்படும் தளங்கள் மற்றும் மடலாற்குழுமங்களில் உமர் அவர்களின் கட்டுரைகளை காணலாம்.
அனைத்து தளங்களிலும் பயன்படுத்தும் வகையில் இயங்கு எழுத்துரு (THENEE.eot) தயாரித்து அனைவரின் நேரத்தையும், சிரமத்தையும் குறைத்தவர் உமர் அவர்கள்.
உமர் அவர்கள் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
மரணத்திற்கான காரணம் குறிப்பிடவில்லையே..?? இளம் வயதினரா..? ஏதேனும் நோயின் காரணமாக இறந்தாரா..?? விவரங்களை, விரும்பினால் அறியத்தரவும்.
உமருடன் எனக்கு அதிகம் பரிச்சயம் கிடையாது. ஒன்றிரண்டு முறை தனிப்பட்ட மடல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் தேனி எழுத்துரு சம்பந்தப்பட்டவையே. தமிழ் லினக்ஸ்க்கு யுனிகோட் எழுத்துருக்கள் தேவைப்பட்ட சமயத்தில் நான் பல எழுத்துரு படைப்போர்களைத் தொடர்புகொண்டு அவர்கள் படைப்பை க்னூ பொது உரிமத்தின்கீழ் வெளியிட முடியுமா என்று கேட்டு வந்தேன். அப்படித் தொடர்புகொண்டவர்களிலேயே மிகவும் அதிக ஆர்வத்தைக் காட்டி முன்வந்தவர் திரு. உமர். தமிழில் யுனிகோட் எழுத்துருக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் திரு உமருக்கு முக்கிய பங்குண்டு. பல தளங்களில் உதவிக் கட்டுரைகள், மடலாடற்குழுக்களில் சந்தேகங்களுக்குப் பதில்கள் என்று உற்சாகமாக யுனிகோட்டை முற்செலுத்தியவர் உமர். அவரது மடல்களில் தொனிக்கும் ஆர்வமும் நேர்மையும் எனக்கு அவர்மீது மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் தந்திருக்கின்றன.
இனம் புரியாத வேதனை நெஞ்சை வதைக்கிறது. இதன் காரணத்தை விரிவாகச் சொல்லத் தெரியவில்லை.
மீண்டும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், நம் தமிழ்வலைஞர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் இணையத்துக்காக எழுத்துருக்கள், செயலிகள் என்று பலவற்றை செய்தவர். மிகுந்த உற்சாகத்துடன் தமிழ்-உலகம், ஈ-உதவி, தமிழ்மணம் போன்ற குழுமங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். அவரது மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
உமர் அவர்களது குடும்பத்தார், உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நிமிர்ந்த நெஞ்சும், கனிவான சொற்களும் உடையவர். தமிழின் மேல் ஆராத பற்றுடையவர். அதை பாராட்டும் வகையில் வெளிக்காட்டியவர்.
அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்புடன்,
இராம.கி.
ஆத்மா சாந்தியடைய கண்கள் கசியப் பிராதிக்கிறேன்.
கடந்த சிலமாதங்களாகஅவரோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது.
ஈ-சங்கமம் இணையஇதழுக்கு அவரது பங்களிப்பும் தமிழ் உலகம்
மடலாடாற்குழுவிலும்அவரது பங்களிப்பை என்னாலும் மற்ற நண்பர்களாலும்
மறக்க இயலாது.பலசமயங்கள் நான் இணையத்தில் இருந்தால் "சாட்" செய்வார்.
இ-சங்கமம் கெளரவ ஆசிரியராக இருந்தாலும் ஆசிரியராக இருந்த தம்பி
விஜயகுமார் உமர் அவர்களைப் பல வேலைகள் சளைக்காமல் கேட்டு அலுப்பில்லாமல்
செய்தும் எனக்கும் தகவல் தெரிவித்த சகோதரப் பாங்கை இழந்துவிட்டேனே
என்று எண்ணும்போது நெஞ்சு விம்மித் தணிகிறது.
முகம் தெரியாவிட்டாலும் அவர் அகம் தெரிந்தவன் என்ற அளவில் இந்த இளம்
வயதில்..அய்யோ கொடுமையோ! வெங்கொடுமைச் சாக்கேடே! சூடுதணியாத
இளம்குருதி குடிப்பதற்கோ என்கிற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவில் எழ
என் கண்களை கண்ணீர் திரையிட்டு மறைக்கிறது. உன் புகழை எழுதவேண்டிய
நான் உனக்கு இவ்வளவு சீக்கிரம் அஞ்சலி செலுத்துவேன் என்று கனவிலும் கருதவில்லை.
பத்துநாட்கள் நோயில் படுத்திருந்தார்; மரணம் அவரைக் கொண்டுபோய்விட்டது
என்றால் கூட சிந்தித்திருக்கலாம். இன்னும் இறந்துவிட்டார் என்பதை என்னால்
நினைக்கவேமுடியவில்லை.
தந்தினிய குடும்பத்தை, ஆறாத்துயரில் அரற்றுங்கள் என்று சொல்லி மீளாத் துயிலில்
வீழ்ந்தாரா? இன்றைய இணைய உலகிர்குத் தேவையான தங்கநிகர் உமரை
இழந்துவிட்டோம். ஒருநாள் உன்னைச் சந்திப்பேன் என்று எண்ணிகொண்டிருந்தேன்;
எட்டாத தொலைவு சென்றுவிட்டாயே சகோதரா!
ஆல்பர்ட்,
அமெரிக்கா.
உமரின் குடும்பத்தவர்க்கும குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மா சிவகுமார்
இவருடய எழில்நிலா கட்டுரைகள் புதியவர்களுக்கு ஒரு வரப்பிராசாதம்.
அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அல்லாஹ் உமர்தம்பி அவர்களின் பிழை பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் நல்குவானாக.
உமர்தம்பி அவர்களின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் மீண்டும் செல்வோம்."
அல்லாஹ் உமர்தம்பி அவர்களின் பிழை பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் நல்குவானாக.
-சிறீதரன், சிட்னி
கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்கள். அதன் காரணமாகவே துபையிலிருந்து ஓய்வு பெற்று, ஊரிலேயே தங்கினார்கள். அவர்கள் நோயுற்றிருந்தது பெரும்பாலோருக்குத் தெரியாது. அதனை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவும் இல்லை.
தான் நோயுற்றிருந்த நிலையிலும் (தம்முடைய) ஒருங்குறி குழுமத்தில் யுனிகோட் குறித்த விவாதங்களில் பங்கேற்று, மற்றவர்களின் சந்தேகங்களுக்கு பதிலிறுத்தி வந்தார்கள்.
இறுதி நாட்களில் மஞ்சள் காமாலை நோயாலும் அவதிப்பட்டார்கள்.
'அவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் மீண்டும் செல்வோம்.'
அன்னாரின் பிழைகளைப் பொறுத்து, சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் வழங்குவானாக.
அப்துல் கரீம்
லிங்க்: http://www.adirai.com/index.php?module=subjects&func=viewpage&pageid=401440